அணையிலிருந்து மரங்கள், கல், மணல் உள்ளிட்டவைகள் வருவதோடு, பயணிகள் நடந்து செல்லும் படிகளிலும் அருவி நீர் ஓடுகிறது. இதனால், மேகமலை வனஉயிரின சரணாலய அதிகாரிகள் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், பக்தர்களுக்கு குளிக்க தடை தொடர்ந்து 4 வது நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தெரியாமல், கேரளாவிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளும், சபரிமலை சீசன் என்பதால் ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் அருவியில் குளிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.