மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மழை பாதிப்பு: எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சிஎஸ்ஐ திருச்சபை முடிவு

மழை பாதிப்பால் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டா சிஎஸ்ஐ திருச்சபை தீர்மானித்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2015, 7:24 am

சுஜித்குமார்

மழை பாதிப்பால் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டா சிஎஸ்ஐ திருச்சபை தீர்மானித்துள்ளது.

இத்திருச்சபையின் கீழ் கோரிமேட்டில் உள்ள தூய லூக்கா ஆலய போதகர் அலெக்சாண்டர் கூறியதாவது:

தென்னிந்திய திருச்சபையின் கீழ் சென்னை 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் இத்திருச்சபைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னை மக்களின் துயரில் பங்கு கொள்ளும் வகையில் புதுச்சேரியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தை ரத்து செய்துள்ளது.

அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலய பங்குமக்களின் வீடுகள் தோறும் இசைக்குழுவினருடன் சென்று பாட்டுப்பாடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வருகையை வெளிப்படுத்தி மகிழ்வோம்.

இந்த ஆண்டு சென்னை மக்களின் துயரில் பங்கேற்பதற்காக இசைக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளது. மவுனமாக சென்று அக்குடும்பத்தினருக்கும், சென்னையில் பாதிக்கப்பட்டோருக்கும் பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளோம்.

அப்போது அக்குடும்பத்தினர் பாடகர் குழுவிற்கு தேனீர், கேக் தருவர். இதனை ரத்து செய்து இதற்காக செலவிடும் பணத்தை  பெற்று நிவாரணப்பணிக்கு செலவிட உள்ளோம். மேலும் கிறிஸ்துமஸ் தினத்தின்போது ஆலயத்தை அலங்கரிப்பதையும் ரத்து செய்து, அப்பணத்தையும் நிவராணப்பணிக்கு வழங்க உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.