மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேலகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் த.சமுத்திரக்கனி (28). இவரது மனைவி ரெஜினா மேரி (28). சமுத்திரக்கனி வேறொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்துக் கொண்டு, மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்ட சமுத்திரக்கனி மனைவியை கம்பால் அடித்துள்ளார். காயமுற்ற அவர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தட்டிக் கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரெஜினா மேரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சமுத்திரக்கனியைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...