மம்சாபுரத்தில் போலி பெண் மருத்துவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.
மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை நாடார். இவரது மனைவி ராணி (62). இவர் முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காமல், மருத்துவர் என்று கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் செய்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர், மருத்துவ ஊரக மருத்துவப்பணி துணை இயக்குநர் முத்துவீரலட்சுமி குறிப்பிட்ட இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு ராணி, மருத்துவம் செய்து கொண்டிருந்தார். இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் டாக்டர் முத்துவீரலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராணியைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...