அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போலி பத்திரம் தயார் செய்து மோசடி: இருவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :24 டிசம்பர் 2015, 1:43 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் எம்.சுந்தரமூர்த்தி (69). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். ராஜபாளையம், பூபதிராஜா வங்கி சாலையைச் சேர்ந்தவர் அ.கண்ணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

கண்ணன் மற்றும் சேத்தூர் த.வைரமுத்து ஆகியோர் சேர்ந்து சுந்தரமூர்த்தியிடம், பிள்ளையார்குளம் கிராமத்தில் நிலம் இருப்பதாயும், கிரையம் முடிக்கவும் வலியுறுத்தியுள்ளார்கள். 29.4.11-ம் தேதி இந்த இடத்தை ரூ.8,19,840-க்கு சுந்தரமூர்த்திக்கு கிரையம் முடித்துக் கொடுத்துள்ளார்கள். அந்த பத்திரத்தைக் கொண்டு, பட்டா மாற்றம் செய்ய சென்றபோது, குறிப்பிட்ட இடம் அரசு புறம்போக்கு என தெரியவந்துள்ளது. 22.8.13-ம் தேதி இது குறித்து கண்ணனிடம் கேட்டபோது, தானே பட்டா மாற்றம் செய்து தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் செய்து தரவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் சுந்தரமூர்த்தி புகார் செய்துள்ளார். அப்போது ரூ.2.40 லட்சம் பணத்தை கண்ணன், சுந்தரமூர்த்தியிடம் திரும்ப கொடுத்துள்ளார். மேலும் மீதமுள்ள ரூ.6 லட்சத்திற்கு 6 காசோலைகளையும் கொடுத்துள்ளார். 15.10.2015-ம் தேதி காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கண்ணன் கணக்கில் போதிய பணம் இல்லததால் காசோலைகள் திரும்பியுள்ளது. இது குறித்து கண்ணனிடம் கேட்டபோது பணம் திரும்ப தர இயலாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து 23.11.15-ம் தேதி தென்மண்டல காவல் துறை தலைவரிடம் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். இப் புகார் மனு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் கண்ணன் மற்றும் வைரமுத்து மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.