ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்

பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளான வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, சட்டப்பாறை, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் காட்டுயானைகள் நடமாட்டம்

News image
Updated On :19 பிப்ரவரி 2015, 1:43 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளான வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, சட்டப்பாறை, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  மலைப்பகுதிகளில் தற்போது மலை இல்லாததால் குடிநீருக்காகவும், உணவு தேவைக்காகவும் காட்டுயானைகள் தனியார் தோட்டங்களில் புகுந்து தற்போது அட்டகாசம் செய்யத் துவங்கியுள்ளது.  பொருந்தல் பகுதியில் பகல் நேரங்களிலேயே ஒற்றையானை நடமாட்டத்தால் கிராமமக்கள் விளைநிலங்களுக்கு செல்ல பயப்படும் நிலை நீடித்து வருகிறது.  தற்போது நெல், சோளம் ஆகியன கதிர்பிடித்துள்ள நிலையில் அதன் வாசத்துக்கு யானைகள் இரவு நேரங்களில் வருகின்றது. 

கடந்த சில நாட்களாக ஏராளமான இடங்களில் நெல், தென்னை ஆகியவற்றை காட்டுயானைகள் சேதம் செய்துள்ளது. பழனி பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் வலங்கையப்பன் மகன் அம்மாபட்டி(47).  இவர் பாலசமுத்திரத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள செங்கோட்டுப்பாறை எனும் இடத்தில் விவசாயம் செய்துள்ளார்.  வியாழக்கிழமை அதிகாலை வயலில் காவல் இருந்த போது வயல்வெளிக்கு  வந்த காட்டுயானைகள் அவரை துரத்தி தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.