சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துவிட்டபோதிலும் அதற்கான பலனை இந்திய மக்கள் அடையவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. திருநெல்வேலியில் கந்துவட்டி, கௌரவ கொலைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேநதிரமோடி தலைமையிலான அரசு தாராளமய, தனியார் மைய அரசாகவும், இந்துத்துவா அரசாகவும் செயல்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். கூடங்குளத்தில் 3 ஆவது மற்றும் 4 ஆவது அணுஉலைகள் அமைக்கக்கூடாது. இதை ஏற்கெனவே எதிர்த்துள்ளோம். அதுதொடர்பான அடுத்தக்கட்ட போராட்டங்களை ஆலோசித்து நடத்துவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டியக்கமாகவே செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இம் மாதம் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.