மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மயிலாடுதுறையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாதந்தோறும் குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ.3500,மருத்துவப்படி ரூ.300 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மயிலாடுதுறையில் ஓய்வுப் பெற்ற அலுவலர்

News image
Updated On :19 ஜனவரி 2015, 9:06 am

அன்புமணி ராமதாஸ்

மாதந்தோறும் குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ.3500,மருத்துவப்படி ரூ.300 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மயிலாடுதுறையில் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்கத்தினர்  திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் கோ.கண்ணன் தலைமை வகித்தார்.சங்கத்தின் நாகை மாவட்டத் துணைத்தலைவர் க.உலகநாதன்,தலைமையிடத் துணைத் தலைவர் த.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ.3500-ம்  மருத்துவப்படி ரூ.300-ம் வழங்கவேண்டும்,ஓய்வூதியர் இறக்கும்போது ரூ 1.50 லட்சம் வழங்கவேண்டும்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்,முழு  ஓய்வூதியம் பெற குறைந்த பட்ச பணிக்காலம் 20 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மயிலாடுதுறை,செம்பனார்கோயில்,குத்தாலம்,திருமருகல்,வேதாரண்யம்,மணல்மேடு  ஆகிய கிளைகளைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர்கள் 150-க்கு மேற்பட்டோர் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.