நெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 18 பேர் கைது
திருநெல்வேலி சந்திப்பில் போலீஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.


திருநெல்வேலி சந்திப்பில் போலீஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த உண்மை ஆவணங்களை வெளியிடக்கோரியும், நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணி ஆகியவை சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி.கண்மணிமாவீரன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு ஆகியோர் தலைமையில் பலர் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை திரண்டனர்.
பின்னர் கோரிக்கைகளை விளக்கி முழக்கமிடத்தொடங்கினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதிராஜா தலைமையிலான போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலர் எ.கே.நெல்சன், மாநகர மாவட்ட மாணவரணிச் செயலர் ஏ.முத்துப்பாண்டி உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...