சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை மாவட்டத்தில் வி.ஏ.ஓ. க்கள் ஒட்டுமொத்த விடுப்பு

பணியாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கோட்டாட்சியரை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை கிராம அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில்

News image
Updated On :10 ஜூன் 2015, 10:08 am

ஷேக் அப்துல்காதர்

பணியாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கோட்டாட்சியரை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை கிராம அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் வட்டம் பிரிக்கப்பட்டதை அடுத்து வருவாய்த்துறை பணியாளர்கள் நியமனம் செய்யும் ப்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து கிராம நிர்வாக அலுவலர் அருள்மாரியை திருநெல்வேலி கோட்டாட்சியர் தன்னிச்சையாக முடிவு எடுத்து கடையநல்லூர் வட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றத்தில் திருநெல்வேலி கோட்டாட்சியர் அடிப்படை விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டக் கிளை சார்பில் மாவட்டம் முழுவுதம் பணி செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள் 270 பேர் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்தனர்.

தொடர்ந்து திருநெல்வேலியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலர் சொ. தங்கபெருமாள் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி. ராமனாதன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி. குமார், துணைத் தலைவர் கே. முத்துசெல்வன், துணைச் செயலர்கள் கே. ராம்குமார், சி. அருணாசலம், எஸ். ராமச்சந்திரன், அமைப்புச் செயலர் ஜி. ஐயப்பன் உள்பட தென்காசி, அம்பாசமுத்திரம்,ஆலங்குளம், ராதாபுரம், நான்குனேரி உள்பட அனைத்து வட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் பாதிப்பு: போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய செயலர், இந்த போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல. கிராம நிர்வாக அலுவலர் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து நடத்தப் படுகிறது என்று தெரிவித்தார். இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சான்றுகள் பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் சான்றுகள் கிடைக்காமல் தவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.