விருதுநகர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்களான டெட்டனேட்டார் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் அருகே கோட்டையூர் கிராமத்தில் உள்ள கல்குவாரிகளில் அனுமதியில்லாமல் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசில தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் சாந்தாலட்சுமி தலைமையில் போலீஸார் புதன்கிழமை அதிகாலையில் கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுரேஷ்குமார் என்பவரது குவாரியில் சோதனை செய்த போது அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டார் ஆகியவை இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
உடனே அங்கிருந்து 200 ஜெலட்டின் குச்சிகள், 100 டெட்டனேட்டார்கள் உள்ளிட்ட வெடிபொருள்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கல்குவாரியின் உரிமையாளர் சுரேஷ்குமார்(33), பணியாளர் குமார்(29) ஆகியோரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.