பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 6,413.54 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 3,500 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 770 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 215 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 109 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 43 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 71 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 105 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
100 அடியை தாண்டியது: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 81 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 100.20 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.85 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 57 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 65.62 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 19.68 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 77 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.56 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி: 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. நிகழ் தென்மேற்கு பருவத்தில் கொடுமுடியாறு அணை நிரம்பும் முதல் அணையாகும். நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.