கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே மூடியிருந்த ரயில்வே கேட்டில் மோதி இருவர் சாவு: 5 பேர் காயம்

இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேட்டில் ஏற்பட்ட விபத்தில்சிக்னல் கிடைக்காததால்,

News image
Updated On :5 மார்ச் 2015, 4:30 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கடலூர் செல்லும் சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில், அதில் வந்த இரு இளைஞர்கள் இறந்தனர். 5 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ்பாபு (30). இவரது சகோதரர் ரமேஷ்பாபு (32). இருவரும் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்துள்ளார். அப்போது ரயில் வருகைக்காக ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடிக்கொண்டிருந்தனர். இதனை பார்க்காமல் மோட்டார் சைக்கிளிள் உள்ள புகுந்து எதிர்புறம் உள்ள ரயில்வேகேட் மீது மோதி, அங்கு கேட் அருகே நின்றிருந்தவர்கள் மீதும் மோதி கீழே விழுந்தனர்.

இவ்விபத்தில் தினேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷ்பாபு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தார். மேலும் இவ்விபத்தில் ரயில்வேகேட் அருகே நின்று கொண்டிருந்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சுகுமார் (65), விக்ரமன் (29), கீழ்அனுவம்பட்டைச் சேர்ந்த ராசாத்தி (48), சுமதி (30), அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க 5 பேர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்னல் கிடைக்காததால், அவ்வழியே வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடங்கள் நின்று தாமதமாக புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.