நடராஜர் கோயிலுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும்: நடராஜர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் தொன்மை வாய்ந்த நடராஜர் கோயிலை தேசிய தொல்லியத்துறையினர் பாதுகாக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட தீட்சிதர்கள் வசம் ஒப்படைப்பது சரியல்ல. காசி விஸ்வநாதர் கோயிலை தனி சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதுபோல் தனி சட்டம் இயற்றி நடராஜர் கோயிலை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கோயிலில் வெளிப்பிரகாரத்தில் நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை இருந்ததாக கோபாலகிருஷ்ண பாரதி தனது வரலாற்றில் எழுதியுள்ளார். எனவே கோயில் தெற்குகோபுர வாயில் அருகே நந்தனார் சிலையை அமைக்க வேண்டும். கோயில் கும்பாபிஷேக குறித்த வரவு, செலவு, பண வசூல்களை கவனிக்க அரசு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.