தமிழகத்தில் வீடு புகுந்து கொள்ளை, கொலை, திருட்டு, தாலி பறிப்பு சம்பவம் என்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு என்று குறைகளை கூறி திமுக ஆட்சியை அகற்றினார்களோ, அதே குறைகள் அதிமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அதிமுக ஆட்சியினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் உடைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளன. எனவே நிச்சயம் 2016-ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அனைத்து சாலைகளும் மிக மோசமாக உள்ளன. அனைத்து துறைகளிலிலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றனர். இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.