பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கார்பன் தொழிற்சாலையில் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் என்ற தொழிற்சாலையில் பராமரிப்பு பணிக்காக 25 அடி உயரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த

News image
Updated On :18 மார்ச் 2015, 1:35 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் என்ற தொழிற்சாலையில் பராமரிப்பு பணிக்காக 25 அடி உயரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த லால்பகதூர் மகன் செமன்சிங் பகதூர் (21) கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் என்ற கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பரமாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் 25 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு செமன்சிங் பகதூர் என்பவர் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக செமன்சிங் பகதூர் தவறி கீழே விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் அவரது உறவினர் சேத்மன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.