கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் கோஷ்டி மோதல்: 5 பேர் காயம், 15 பேர் கைது

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :30 மார்ச் 2015, 12:53 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் எம்ஜிஆர் தில்லைக்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (19). கேஸ் கம்பெனியில் வேலைபார்க்கும் இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்து விட்டு தில்லைக்காளியம்மன் கோயில் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த வேலு (23) என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து சுதுமார் மீது மோதுவது போல் நிறுத்தியுள்ளார். இதுகுறித்து சுகுமார் தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்த வேலு தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் வந்து சுகுமாரை தாக்கியுள்ளார்.அப்போது சுகுமாரின் ஆதரவாளர்கள் வள்ளி, விஜய், விமல், சின்னராது ஆகியோரின் தடுத்துள்ளனர். அவர்களையும் அக்கும்பல் தாக்கிவிட்டு, அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மரையும் சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகினர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மோதலில் படுகாயம் அடைந்த சுகுமார் உள்ளிட்ட 5 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகுமார் தரப்பினர் தாக்கியதில் வேலு தரப்பை சேர்ந்த அண்ணாகுளம் புவனேஸ்வரன் என்பவர் படுகாயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இருதரப்பினர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தனி, தனியே புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் இருதரப்பினர் 21 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் வேலு (23), கலையரசன் (17), கருணாசாகர் (18), பூபதி (20), அப்பு(21), சூர்யா (18), ஜீவா (19), பிரபாகரன் (19), கனகராஜ் (23), விக்கி(23), வெங்கடேசன் (21), மாணிக்கம் (21), வினோத் (21), சதீஷ் (21), அப்பு (19) ஆகிய 15 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் மோதலால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.