இக்கோயிலில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி, பணியை ராஜிநாமாக செய்துவிட்டு ஊதியம் இன்றி பூசாரியாக இருந்து நாக.குழந்தைவேலு என்பவர் கடந்த பல வருடங்களாக பூஜை செய்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை பூஜை செய்யும்போது சிவலோகநாதர் சிலை பீடத்திலிருந்து நீர்கசிவது தெரிந்தது. நீர்நின்று விடும் என நினைத்து அதன் மேல் தினமும் துணியை போட்டு வைத்தும், தினமும் நீர் கசிந்து வருவதை கண்டு ஆச்சரியமுற்றார். தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெறும் வேளையில் சுவாமி பீடத்திலிருந்து நீர்கசியும் செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சிரயத்துடன் சிவன்சிலையிலிருந்து நீர்கசிவை ஆச்சரியத்துடன் பார்த்து தரிசித்து செல்கின்றனர்.