மேலும் பள்ளியின் வளர்ச்சி குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு இக்கிராமத்தில் வீடுகள் தோறும் கொடுத்து, இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
தற்போது மெட்ரிக்குலேசன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நிர்வாகம் ஊர் முழுவதும் பிளக்ஸ் போர்ட்டுகள் வைத்துள்ள நிலையில், இந்த அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி பிளக்ஸ் போர்டுகள் ஊரெங்கும் வைக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பார்த்து, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியை பாராட்டிச் செல்கிறார்கள்.
இது குறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் கூறுகையில்: இப் பள்ளியின் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன், தங்களது சொந்தப் பணத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கும், பல்வேறு உதவிகளைச் செய்வதற்கும், பாடங்களிள் புதிய யுக்திகளைக் கையாண்டு சொல்லித் தருவதிலும் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்றார்.