சாதியைக் கூறி இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதியைக் கூறி ஒருவரை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதியைக் கூறி ஒருவரை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர், ஆதிதிராவிடர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பு.பிள்ளையார் (56). இவருக்கு சேதுநாராயணபுரம் ஊருக்கு கிழக்கே விவசாய காடு உள்ளது. இக் காட்டின் அருகே வத்திராயிருப்பு, அக்ரஹாரம் முதல் தெருவைச் சேர்ந்த சி.விஸ்வநாதன் என்பவரின் காடு உள்ளது. இரு காடுகளுக்குமிடையே நடைபாதை உள்ளது. இந்தப் பாதையை பிள்ளையார் பயன்படுத்தக்கூடாது என்று விஸ்வநாதன் கடந்த இரு ஆண்டுகளாக தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை பிள்ளையார் தனது காட்டில் பாகற்காய் பிடுங்கிக் கொண்டு குறிப்பிட்ட நடைபாதை வழியே வந்துள்ளார். அப்போது விஸ்வநாதன் காட்டின் வேலை செய்து கொண்டிருந்த பகவதி என்பவர் வந்து, இப் பாதை வழியே வரக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு பிள்ளையார், உனது முதலாளியை வரச்சொல் என்று கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த விஸ்வநாதன், பிள்ளையாரை சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பிள்ளையார் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...