டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நாளை 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 75 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு

News image
Updated On :9 மே 2015, 12:31 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 75 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 1300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்தில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெறுகிறது.

துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர் வரவேற்கிறார். பதிவாளர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்குகிறார்.

75 நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ மாணவியர் 1300 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை, டி.சி.எஸ். தலைவர் பட்டாபிராமன் கிருஷ்ணசாமி, நாஸ்காம் தலைவர் வி.உதயசங்கர் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் டீன் வெளிநாட்டு உறவு எஸ்.ராதாகிருஷ்ணன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் அலாவுதீன் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.