டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குடிசை நாசம்: ஸ்ரீவிலி அரிமா கோல்டு சார்பில் பொருட்கள் உதவி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு மற்றும் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சேதம் அடைந்த குடும்பத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :9 மே 2015, 9:19 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு மற்றும் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சேதம் அடைந்த குடும்பத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.

நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி, காமட்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வி. இவரது குடிசை வீடு மின் கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை தீ பற்றி எரிந்ததில் குடிசை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் நாசமாயின.

இது குறித்து தகவல் தெரிந்தவுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்க பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம், பாண்டிசெல்வி குடும்பத்தினரைச் சந்தித்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அப்போது கோல்டு அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.