ஜெயலலிலாத விடுதலை: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிலாதா, மேல் முறையீட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிலாதா, மேல் முறையீட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். ஜெயலலிதா வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இதனை்க் கொண்டாடும் வகையில் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்து, இனிப்புகள் வழங்கினர்.
பின்னர் நகரின் 33 வார்டுகளுக்கும் சென்று, அங்கும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், 33-வது வார்டு கிளைச் செயலாளர் க.வீராச்சாமி, வழக்குரைஞர்கள் மங்களசாமி, சௌந்தரராஜன், முருகன், ஜெகதீசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...