வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் இடியுடன் மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இடியுடன் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

News image
Updated On :13 மே 2015, 9:30 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இடியுடன் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 1 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 7 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 4 மி.மீ மழையும், திருநெல்வேலியில் 1.6 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 2 மி.மீ மழையும்,சங்கரன்கோவிலில் 2 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 7.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதனிடையே புதன்கிழமை விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் இடியுடன் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.