தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

வந்தவாசி: கோயில் பூட்டை உடைத்து சுவாமியின் 6 சவரன் தங்கத்தாலி திருட்டு

வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்கத்தாலி திருட்டு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :16 மே 2015, 2:07 pm IST

வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்கத்தாலி திருட்டு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூஜாரி அய்யானரப்பன் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் சனிக்கிழமை அதிகாலை சென்று பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் மற்றும் உற்சவர் அம்மன் கழுத்திலிருந்த தலா 3 சவரன் மதிப்புள்ள 2 தங்கத்தாலிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.