டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்ததவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :24 மே 2015, 11:54 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்ததவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சிவகாசி அருகேயுள்ள மாரனேரி-பெரியபொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் முத்து மகன் பால்சாமி (48). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். புதன்கிழமை வேலை முடித்து நாகபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே ஓடியதையடுத்து நிலை தடுமாறி பால்சாமி கீழே விழுந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மல்லி போலீஸ் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.