கடும் கத்தரி வெயிலால் மக்கள் பாதிப்பு: வெறிச்சோடிய புதுவை சாலைகள்
அக்னி நட்சத்திரத்தின் உச்சம், கடுமையாக எட்டியுள்ளதால் புதுச்சேரியில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.


அக்னி நட்சத்திரத்தின் உச்சம், கடுமையாக எட்டியுள்ளதால் புதுச்சேரியில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மேலும் மதிய வேளையில் வெளியில் நடமாடவே மக்கள் அச்சம் அடைந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். கோடை வெயிலை தொடர்ந்து அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் வங்கக் கடலில் உருவான வெப்பச் சலனத்தால் சில நாள்கள் மழை பெய்தது. இதனால் கத்தரி வெயிலின் தாக்கம் சிறிதளவு குறைந்தது.
இந்நிலையில் மீண்டும் கடும் உச்சத்தை எட்டியுள்ள அக்னி நட்சத்திரம் புதுச்சேரியில் மக்களை வாட்டி வதக்கிறது. காலை 7 மணியில் இருந்தே வெயிலின் உக்கிரம் அதிகமாகி இருக்கிறது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. புதுச்சேரியில் திங்கள்கிழமை 102 டிகிரி வெயில் அளவு காணப்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுகின்றனர். இந்த வெயிலின் உக்கிரம் இன்னும் 5 நாட்கள் நீடிக்கும் என மக்கள் நிம்மதி அடைந்தாலும், நான்கு நாட்களை கடப்பது மிக கடினமாக இருக்கும் என பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர். வெயில் கொடுமையில் வாடிய மக்கள் மாலை வேளையில் கடற்கரைக்கு வந்து நள்ளிரவு வரை காற்று வாங்கி செல்கின்றனர். இதற்கிடையே அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் நான்கு நாட்கள் உள்ளது என்றும், வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். கடலோர பகுதிகளில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...