சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வீரவநல்லூர் அருகே எஸ்.ஐ. விபத்தில் பலி

வீரவநல்லூர் அருகே சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுதம் (57) சாலை விபத்தில் இறந்தார்.

News image
Updated On :31 மே 2015, 8:50 am

ஷேக் அப்துல்காதர்

வீரவநல்லூர் அருகே சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுதம் (57) சாலை விபத்தில் இறந்தார்.

முக்கூடல் அருகே பாப்பாக்குடியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து வந்தார். சனிக்கிழமை இரவில் வெள்ளங்குளி, வெள்ளநீர் கால்வாய் பாலம் வரை மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டாராம். அப்போது, வெள்ளங்குளியில் கன்னடியன் கால்வாய் திருப்பத்தில் வந்தபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாராம்.

வேலாயுதம் விபத்தில் சிக்கிய தகவல் காவல் நிலையத்தில் தெரியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவந்தது. பலத்த காயமடைந்த வேலாயுதம் சம்பவ இடத்திலே இறந்து கிடந்தார்.போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.