கிணற்றில் விழுந்து முதியவர் சாவு
.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.மம்சாபுரம், ராஜாமணி நாடார் தெருவைச் சேர்ந்தவர்


.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.மம்சாபுரம், ராஜாமணி நாடார் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் (60). இவர் செவ்வாய்கிழமை மதியம் வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை செல்லையா என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் இவரது சடலம் மிதப்பதை அறிந்து, அவரது உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...