விரைவு ரயில்களில் நிலவும் அதிகப்படியான கூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்கம் மாநிலம் சாந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 02842: அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.25 மணிக்கு சாந்த்ராகாச்சி சென்றடையும்.
இந்த ரயில் கூடூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்தரி, சாமல்கோட்டை, விசாகப்பட்டினம், பாலசா, பிரம்மபூர், குர்தா சாலை, புபனேஷ்வர், கட்டக், பாத்ரக், பாலசூர், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






