மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் திறப்பு: மக்களுக்கு பாதிப்பில்லை

நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில்  புதுச்சேரியில் புதன்கிழமை மருந்துக் கடைகள் திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்பின்றி தங்களுக்குத்தேவையான மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

News image
Updated On :14 அக்டோபர் 2015, 5:57 am

சுஜித்குமார்

நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில்  புதுச்சேரியில் புதன்கிழமை மருந்துக் கடைகள் திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்பின்றி தங்களுக்குத்தேவையான மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் ஈ பார்மஸி திட்டத்திற்கு எதிர்ப்பு மருந்துக் கடை உரிமையாளர்கள், மருந்தாளுநர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் படி மருந்து, மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பது தவறானது என மருந்து கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் விற்பனை மூலம் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகரிப்பதுடன், தரமில்லாத போலி மருந்துகள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

8 லட்சம் கடைஉரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 14-ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு நடத்தப்படும் என அகில இந்திய மருந்துக் கடைக்காரர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும்

புதன்கிழமை மருந்துக் கடையடைப்பு போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் தடை உத்தரவு மக்களை பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் மருந்துக் கடைகள், மருந்தகங்களை உரிமையாளர்கள், மருந்தாளுநர்கள் மூடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தடை உத்தரவு பிறப்பித்தார்,

இந்நிலையில் புதுச்சேரியில் மருந்துக் கடைகள், மருந்தகங்கள் மூடப்படாது என விற்பனையாளர்கள் தரப்பினர் அறிவித்திருந்தனர். மேலும் கடையடைப்பு நடத்தப்படும் என்ற ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புகளையும் அகற்றி விட்டனர்.

இதன்படி புதுவையில் 495 மருந்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதனால்புதுச்சேரியில்  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை சிரமமின்றி வாங்கிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.