செவிலிய பட்டயப்படிப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் உள்ள 2,100 இடங்களுக்காக நடைபெற்ற இரண்டு கட்ட கலந்தாய்வின் முடிவில் 71 காலியிடங்கள் ஏற்பட்டன.
இந்த இடங்களுக்கான இறுதி கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 247 மாணவிகளுக்கும் தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் அட்டவணைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணி கலந்தாய்வு தொடங்கும். இதில் பங்கேற்போர் தங்கள் அசல் சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org