சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் சிறையில் தற்கொலை முயற்சி: உறவினர்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் புதன்கிழமை கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் செய்தனர்.









