டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுவிலக்கில் திமுக தினம் ஒரு நிலைப்பாடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கருணாநிதி கூறி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:08 pm

அரவிந்தன்

மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கருணாநிதி கூறி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 கருணாநிதி முதலில் மதுவிலக்கை கொண்டு வருவதாகக் கூறினார். அதன்பின்பு முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்குக்குதான் என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

 மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் நாளே மதுவிலக்கு ஆணையில் கையெழுத்திடுவேன் என்று பேசினார். அங்கிருந்து தஞ்சாவூர் வருவதற்குள் நிலைப்பாட்டை மாற்றி சட்டம் இயற்றிதான் மதுவிலக்கை கொண்டு வருவோம். ஆட்சிக்கு வந்த 2-ஆம் நாளிலேயே சட்டம் இயற்றுவோம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக கருணாநிதி திரும்பத் திரும்பக் கூறியும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. திமுகவினர் யாரும் மது விற்பனை செய்ததும் கிடையாது என்று கூறியிருக்கிறார். திமுக  வேட்பாளர்களில் பலர் மது ஆலை உரிமையாளர்கள்தான். மதுவுடன் தொடர்புடைய திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாமக தயாராக உள்ளது.

  கடந்த 40 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த அதிமுகவும், திமுகவும் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.