தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொறியாளரிடம் ரூ. 30 லட்சம் மோசடி: சிபிசிஐடி விசாரணை

புதுவையை சேர்ந்த பொறியாளரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :29 மார்ச் 2016, 8:58 am

சுஜித்குமார்

புதுச்சேரி : புதுவையை சேர்ந்த பொறியாளரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி தில்லைமேஸ்திரி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் சிங் (48). பொறியாளரான இவருக்கு பழக்கமானவர்கள் லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜன்பாபு மற்றும் அவரது மனைவி அமுதா ராணி. ராஜன்பாபு மற்றும் அமுதா ராணிக்கு பழக்கமான முத்துராமலிங்கம் என்பவர் காரைக்குடியில் பங்குச் சந்தையில் ஈடுபடும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

முத்துராமலிங்கத்திடம் பங்குகள் வாங்கித் தருவதாக சிவக்குமார் சி்ங்கிடம் ராஜன்பாபுவும், அமுதா ராணியும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு ராஜன்பாபு, அமுதாராணி மூலம் ரூ. 36 லட்சத்துக்கு முத்துராமிலிங்கத்திடம் பங்குகள் வாங்கினார்.

ஆனால் பங்குகள் வாங்கிய சில நாள்களில் நிறுவனத்தை முத்துராமலிங்கம் மூடிவிட்டார். இது குறித்து அறிந்த சிவக்குமார், 3 பேரையும் அணுகி கேட்டுள்ளார். அப்போது ரூ. 6 லட்சம் மட்டும் முதலில் கொடுத்துள்ளனர். மீதிப் பணத்தை வெகு நாள்களாகியும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.