தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரி பாஞ்சாலி அம்மன் கோவில் தேர் கவிழ்ந்து ஒருவர் பலி: 10 பேர் படுகாயம்

புதுச்சேரி திலாஷ்பேட்டையில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் இன்று தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த தேரோட்டமும் நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2016, 6:36 am

சுஜித்குமார்

புதுச்சேரி திலாஷ்பேட்டையில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் இன்று தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த தேரோட்டமும் நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு பின்புறம் உள்ள தெருவில் தேர் வந்து கொண்டிருந்த போது திறந்து கிடந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் தேர் சக்கரம் சிக்கி கவிழ்ந்தது.

இதில் சரவணன் (45) என்பவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்டனர். இந்த தேர் 25 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.