சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2016, 2:43 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தாலும்கூட திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து இம்மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த காற்று வீசியது. காலை 8 மணி நிலவரப்படி பாளையங்கோட்டையில் 6 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., ஆலங்குளத்தில் 2.4 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 5.8 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 3 மி.மீ., சேரன்மகாதேவியில் 5 மி.மீ., பாபநாசம் அணையில் 12 மி.மீ., பாபநாசம் கீழ் அணையில் 6 மி.மீ. மழை பதிவானது. 

அணைகளில் நீர்இருப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் 24.20 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 60.30 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 36.29 அடியாக இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 85.88 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 17 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

குடிநீர்த் தட்டுப்பாடு: அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக மட்டும் பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இது போதுமானதாக இல்லாததால் தாமிரவருணி ஆற்றிலுள்ள குடிநீர்த் திட்டங்களுக்கு தேவையான நீர்வரத்து கிடைக்காமல் இவ்விரு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திசையன்விளை, ராதாபுரம், நான்குனேரி பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.