அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016 -17 ல் 7.1 சதவீதமாக ஆக இருந்தது. இது ஜி.எஸ்.டி மசோதா மற்றும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால்

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 11:08 am

DIN

புதுதில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016 -17 ல் 7.1 சதவீதமாக ஆக இருந்தது. இது ஜி.எஸ்.டி மசோதா மற்றும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் மெதுவாக வளர்ந்து நடப்பு நிதி ஆண்டில் 7.4 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018ம் ஆண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.  அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளதாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார். மேலும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் மாற்றம் ஏதுமின்றி, 6.25% என்ற முந்தைய அளவிலேயே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்

அதேசமயம், ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதம் 6% ஆக அதிகரிப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார சூழல் இயல்பான நிலையில் உள்ளபோதிலும், மொத்த விலை பணவீக்கம் அதிகரித்தபடி உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இதர பொருளாதார நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடி உள்ளதாக, ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.