இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சோனியா, ராகுல் காந்தி நாடு திரும்பினர்

வெளிநாடு சிகிச்சை முடிந்ததை அடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் இன்று நாடு திரும்பினார்.

News image
Updated On :24 மார்ச் 2017, 12:51 pm

தினமணி

வெளிநாடு சிகிச்சை முடிந்ததை அடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் இன்று நாடு திரும்பினார்.

சோனியா காந்தி சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இதனால் அவர் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திதான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இருப்பினும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி கிட்டவில்லை. 

இதனிடையே சோனியா காந்தி வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்ததை அடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் இன்று நாடு திரும்பினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.