ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் சாவு

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கார் கவிழ்ந்து இருவர் உயிரிழந்தனர்.

News image
Updated On :2 மே 2017, 11:12 am

சி. உதயகுமார்

விராலிமலை:  விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கார் கவிழ்ந்து இருவர் உயிரிழந்தனர். மேலும் 4  பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோயிலைச் சேர்ந்தவர் திருநாவுகரசு இவரது மனைவி ராஜேஸ்வரி மகன் சித்தார்த் மற்றும் உறவினர்கள் நெடுஞ்செழியன், தென்னவன், மணிமேகலை ஆகிய 6 பேரும் ஒரு காரில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு விராலிமலை வழியாக சென்று கொண்டிருந்தனர் காரை திருநாவுகரசு ஓட்டியுள்ளார்.

விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலை விராலூர் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் மணிமேகலை, சித்தார்த் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மற்ற நால்வரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.