கூட்டுறவு கடன் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
கூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


சென்னை: கூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறு,குறு என பாகுபாடு காட்டாமல், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதிகள் முரளிதரன், நாகமுத்து ஆகியோர் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கடன் தள்ளுபடியை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதால் தமிழக விவசாயிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...