இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: புதுவை பல்கலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 4:06 pm

தினமணி

புதுச்சேரி:  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகத்தில் அமைதியான சூழல் அமைய உத்தரவிடக்கோரி மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2015ம் ஆண்டு நடந்த வன்முறையில் பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இப்போராட்டம் பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழலை பாதிப்பதுடன் மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து காவல்துறை டிடிஜிபி ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், டிஜபி ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி எஸ்.கே. கெüதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும், வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்யலாம்  உரிய அடையாள அட்டை இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி புதுவை பல்கலையில் வியாழக்கிழமை முதல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவர்கள், ஊழியர்கள், என அடையாள அட்டை காண்பித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
50 போலீஸôர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எவராக இருந்தாலும் அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.