ஏ.டி.எம்.களில். பணப்புழக்கம் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் (ஏடிஎம்) பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஏடிஎம் வாசல்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்தப் பிரச்னை குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவர் ரஜினிஷ் குமார் கூறுகையில், 'விவசாய விளை பொருள்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும் காலம் இது. எனவே, கரன்சி நோட்டுகளுக்கான தேவை அதிகம் உள்ளது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரங்களில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இல் பணப் பரிவர்த்தனை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் இந்த சிக்கல் முடிவுக்குவந்து இயல்பு நிலை ஏற்படும் என்று எஸ்.பி.ஐ. தலைமை இயக்க அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்த்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி தொடர்ந்து நிலைமையை கண்காணித்து, ஏடிஎம்களில் ஏராளமான பணத்தை வழங்குவதற்கு மகத்தான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் 92% பணப்புழக்கம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



