பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வருமான வரித்துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ரூ.2 கோடி தங்கம் கொள்ளை

ராஜஸ்தான் மாநிலத்தின் வருமான வரித்துறை துணை இயக்குநர் (விசாரணை) அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 4:26 pm

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் வருமான வரித்துறை துணை இயக்குநர் (விசாரணை) அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் செயல்பட்டு வருகிறது வருமான வரித்துறை துணை இயக்குநர் அலுவலகம் (விசாரணை) உள்ளது.

இந்த அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பிடிபட்ட தங்கம் இந்த அலுவலகத்தில் உள்ள அலமாரியின் உள்ளே பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை (ஏப் 21) இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) அடித்து உடைத்துவிட்டு, அலமாரியை உடைத்து உள்ளே இருந்த பாதுகாப்பு பெட்டக சாவியை எடுத்தனர். பாதுகாப்பு பெட்டகத்தின் இரண்டு பெட்டிகளின் சீல்களை உடைத்துவிட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

ஏப்ரல் 18 மற்றும் 21க்கு இடையே பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.