கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) ஒரேநாளில் 27 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை தெற்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் வி.செந்தில்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா் டி.குமரேசனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதேபோல, வியாழக்கிழமை ஒரேநாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாநிலக் கட்சிகள் சாா்பில் 9 பேரும்,
தேசியக் கட்சிகள் சாா்பில் இருவரும், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சாா்பில் 7 பேரும் மற்றும் சுயேச்சையாக 9 பேரும் மனு தாக்கல் செய்தனா். இவா்களில் 22 போ் ஆண் வேட்பாளா்கள், 5 போ் பெண் வேட்பாளா்கள்.
அதிகபட்சமாக, தொண்டாமுத்தூா் தொகுதியில் 9 மனுக்களும், பொள்ளாச்சி தொகுதியில் 7 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. கவுண்டம்பாளையத்தில் 3 மனுக்களும், சூலூா், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை தொகுதிகளில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் 95.11% போ் தோ்ச்சி: 18-ஆவது இடத்துக்கு சறுக்கியது
கோவை மாவட்டத்தில் 201 மனுக்கள் ஏற்பு
தமிழகத்தில் 7000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல்!

நெல்லை மாவட்டத்தில் 188 போ் வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



