மார்ச் 15-இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாடுதழுவிய அளவில், மார்ச் 15-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு அழைப்பு
மார்ச் 15-இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Updated on
1 min read

மும்பை: நாடுதழுவிய அளவில், மார்ச் 15-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

9 வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பின் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் வாயிலாக வரும் மார்ச் 15-ஆம் தேதி  நாடுதழுவிய அளவில் ,வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் விவகாரத்தில் இழுபறி நீடிப்பதை கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பாக தர்ணா, பேரணி போன்றவை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com