ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் குவியல் குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வீட்டு உபயோகத்திற்கு கழிவுநீர் தொட்டி தோண்டும்போது தமிழ்க் குழுக்கள் ( டெலோ அமைப்பு) பயன்படுத்திய ஆயுதங்கள் குவியல் குவியலாக திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 ராக்கெட் லாஞ்சர்கள், 15 பாக்ஸ் கையெறி குண்டுகள், 5 கண்ணிவெடிகள், 4 பெட்டிகள் நிறைய கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகள் என ஏராளமான ஆயுதங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. தோண்டத் தோண்ட குவியல் குவியலாக கிடைத்த ஆயுதங்கள் குறித்து வெடுகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










