வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கிம் ஜோங் உன்னை சந்திக்க வடகொரியா வந்தடைந்தார் மூன் ஜே இன்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங்

News image
Updated On :18 செப்டம்பர் 2018, 9:27 am IST


சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங் வந்தடைந்தார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றவாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக,  சியோல் விமான நிலையத்திலிருந்து காலை 8.40 மணியளவில் அதிபர் மூன் ஜே இன் தனி விமானம் புறப்பட்டு, பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9.50 மணியளவில் வந்தடைந்தார். தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை, வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு அளித்தார். விமானநிலையத்தில் கூடியிருந்த வட கொரியா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங்-உன்னுடன் நடைபெற்றது. 

அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், தனது மனைவி மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட 110 உயர்மட்ட குழுவினருடன் வடகொரியா வந்துள்ளார். 

இரு நாட்டு தலைவர்களின் மூன்று நாட்கள் சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இவர்களின் சந்திப்பு அமையும் இருக்கும் என்றும் அணு ஆயுதங்களைக் கைவிடும் வட கொரியாவின் நடவடிக்கைகளை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வது, அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆகிவை குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவர்களின் பேச்சுவார்த்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.