முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள் மீட்பு: தோளில் சுமந்து சென்ற காவலருக்கு குவியும் பாராட்டு!

குஜராத் கனமழை வெள்ளித்தில் சிக்கிய சிறுமிகளைத் பத்திரமாக மீட்டு தோளில் சுமந்து சென்ற காவலர் பிரித்விராஜ் ஜடேஜாவுக்கு பாராட்டுகள் 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2019, 2:55 pm IST


குஜராத் கனமழை வெள்ளித்தில் சிக்கிய சிறுமிகளைத் பத்திரமாக மீட்டு தோளில் சுமந்து சென்ற காவலர் பிரித்விராஜ் ஜடேஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதில், குஜராத்தில் பெய்து வரும் கனமழையால், பல கிராமங்கள் நீரில் முழ்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் பாதித்த மோர்பி கிராமத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி மீட்புப் பணி நடைபெறும் போது காவலர் பிரித்விராஜ் செய்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரிதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

அதாவது, மோர்பி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளும் வெளிவர முடியாமல் தவித்து வந்துள்ளனர். அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்து பிரித்விராஜ் ஜடேஜா, இரண்டு குழந்தைகளையும் இரு தோள்களிலும் குழந்தைகளை அமரவைத்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இடுப்பளவு தண்ணீரில் நடந்தே சென்று காப்பாற்றி உள்ளார். பிரித்விராஜ் ஜடேஜாவின் சேவை வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. இதையடுத்து காவலர் பிரித்விராஜ் ஜடேஜாவின் இந்த துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

அம்மாநில முதல்வர் விஜய் ரூபானியின் பாராட்டு செய்தியில், கடுமையான சூழல்களிலும் அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு காவலர் பிரித்வி ராஜ்சிங் ஜடேஜா ஒரு எடுத்துக்காட்டு. அவரது உறுதியைப் பாராட்டுங்கள்" என தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமன் பாராட்டில், பிரித்வி ராஜ்சிங்கின் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு தலைவணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.