திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காஷ்மீர் பாகிஸ்தானின் ரத்த நரம்பு: பிரதமர் இம்ரான் கான் அதிரடி ஆவேச பேச்சு

ஜம்மு-காஷ்மீா் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" பகுதியாகும். அதில் மாற்றங்கள் செய்வதென்பது, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும்

News image
Updated On :6 செப்டம்பர் 2019, 8:39 pm IST


இஸ்லாமாபாத்: காஷ்மீர் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" மற்றும் அதன் சிறப்பு அந்தஸ்தை மாற்றுவதற்கான இந்தியாவின் முடிவு பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும் சவால் விடுத்துள்ளது என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்,

இந்தியாவுடன் கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் நினைவாக அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 6-ஆம் தேதியை ‘பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின’மாக அனுசரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான் பேசிசுகையில், 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உலக நாடுகளிலும், ஐ.நா.விலும் ராஜதந்திரமாக பாகிஸ்தான் தூதரக ரீதியாக எடுத்துரைத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீா் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" பகுதியாகும். அதில் மாற்றங்கள் செய்வதென்பது, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும் விடப்பட்டிருக்கும் சவாலாகும்.

இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு குறித்து சா்வதேச சமூகம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். 

மேலும் இந்தியாவின் அணு ஆயுதங்கள் குறித்து கவனிக்க மறுத்தால், அதன் பிறகு ஏற்படும் பேரழிவுக்கு இந்த உலக சமுதாயமே பொறுப்பாக வேண்டியிருக்கும்.

 பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்பதை இந்த உலகுக்கு தெளிவாகத் தெரிவித்திருக்கிறேன். அதேவேளையில் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு சவால் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று இம்ரான் கான் ஆவேசமாக பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.